முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: மதுரையில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு : 15-ம் தேதி முதல் வழக்கமான ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் பழைய நடைமுறைகள் மற்றும் தளர்வுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, வேலூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்கிடையே, நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும்  திருப்பரங்குன்றம்  ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடந்த 06.07.2020 அன்று அதிகாலை முதல் 12.7.2020  நள்ளிரவு 12.00 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்த முழு ஊரடங்கின் போது கொரோனா நோய்  தொற்று குறைந்திருந்தது. 

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி,  மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட  கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 2 நாட்களுக்கு, அதாவது வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க  அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால்,  மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  24.6.2020  அதிகாலை  முதல்  30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு உத்தரவானது முதலில் கடந்த 5-ம் தேதி வரையும், அதன் பின்னர் 12-ம் தேதி நள்ளிரவு வரையும் நீட்டித்து ஆணையிடப்பட்டது.  

இந்த முழு  ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும்  நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவை  தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கண்டபகுதிகளில், முழு ஊரடங்கினை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால்,  தற்போது நடைபெற்று வரும் தீவிர பணிகள் மூலமும், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய்த் தொற்று உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து, நோய்தொற்றினைக்  கட்டுப்படுத்த  ஏதுவாக அமையும்  என்பதால்,  மதுரை மாவட்டத்தில்  மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டபகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து  கிராம ஊராட்சிகளிலும் 14.07.2020  நள்ளிரவு  12.00 மணி  முடிய முழு ஊரடங்கு  நீட்டிக்கப்படுகிறது.  முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில், ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும்,  தளர்வுகளும் 14.07.2020 நள்ளிரவு 12.00 மணி முடிய தொடரும் என்றும் அறிவிக்கப்படுகிறது. 

முழு ஊரடங்கு  14.07.2020 வரை அமலில் உள்ள  மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், 15.07.2020 அதிகாலை 00 மணிமுதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை, இப்பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இருந்த  ஊரடங்கின் நிலை மீண்டும் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.  மேற்சொன்ன நடவடிக்கையின் காரணமாக மதுரை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு  நல்க கேட்டுக்  கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து