முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் பா.ஜ.க.வில் இணைந்தார் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. நேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

கடந்த 2018 நவம்பரில் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக பதவியேற்று 15 மாதங்கள் ஆட்சி நடத்தினார். 

அவருக்கு எதிராக காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தினார். அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்பின் ஜோதிர் ஆதித்யசிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதனால் கடந்த மார்ச் 20-ம் தேதி காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த மார்ச் 23-ம் தேதி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. அரசு பதவியேற்றது. அதன் பின்னர் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி.யானார். அவரது ஆதரவாளர்கள் ம.பி.யில் அமைச்சர்களாகினர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரத்யூமன் சிங் லோதி நேற்று போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை முறைப்படி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து