எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வரும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், பி.தங்கமணி ஆகியோர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் மற்றும் கவச உடைகள், நோய்த்தொற்றில் இருந்து மீண்ட 5 மாநகராட்சி ஊழியர்களுக்கு பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
உலகம் முழுவதும் ஒரு கோடியே 28 லட்சம் பேர் இந்த கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் இதுவரை சந்தித்திராத நோய்த்தொற்று. மனித குலமே இதுவரை பார்த்திராத வரலாற்றில் அறியாத நோய்த்தொற்று கொரோனா நோய்த்தொற்று இந்த நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த தொற்று மருத்துவ பரிசோதனை தமிழகத்தில் கிட்டதட்ட 42 ஆயிரத்து 531 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 420 பேர் அதில் 89 ஆயிரத்து 522 பேர் குணமடைந்திருக்கிறார்கள், கண்ணுக்கு தெரியாத எதிரியை வீழ்த்தும் யுத்தத்தில் ஆயுதங்களின்றி மக்களை காக்கும் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணையோடும் அக்கறையோடும் மேற்கொண்டு வெற்றிப்பாதையில் பயணித்துள்ளார், இதுவரை 89 ஆயிரம் பேர் குணமடைந்திருப்பது பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.
மாநகரை விட்டே பலர் காலி செய்து மற்ற நகரங்களுக்கு சென்ற நிலையில் வாழவே தகுதியற்ற நகரம் என்று சென்னை மாநகரம் என்று தகவல்கள் பரப்பப்பட்டன, அப்படிப்பட்ட சென்னை மாநகரை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் வருவாய்த்துறை பணியாளர்கள் மூலம் நோய்த்தொற்றில் சென்னையில் சோதனைகளை அதிகப்படுத்தி, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வியூகம் வகுத்து காப்பாற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது தான் முகக்கவசம் அணிந்து வரும் காட்சியை காண முடிகிறது,
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் மாதமே முகக்கவசம் அணிந்து மற்றவர்களுக்கு ரோல் மாடலாக விளங்கினார். ஊரடங்கு நேரத்தில் யாருமே வெளியே வரக்கூடாது என்பதற்காக தான் இ-பாஸ் வழங்கப்படுகிறது, இதில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், இறப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க முடியாது.
இந்த வகை அவசிய தேவைகளுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது,அவை தேவையானவர்களுக்கு கிடைக்க வேண்டும், தேவையில்லாதவர்கள் முயற்சி மேற்கொண்டால் தேவையானவர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், இ-பாஸ் விவகாரத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது,
இதில் தேவைப்பட்டால் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு முதல்வரின் அனுமதியோடு இ-பாஸ் வழங்கப்பட்டது குறித்து புள்ளி விபரங்களை வழங்க தயாராக இருக்கிறோம். ஊரடங்கு என்பது மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டப்படி பிறப்பிக்கப்பட்டது, மருத்துவ நிபுணர் குழு உலக சுகாதார அமைப்பு போன்றவற்றின் அமல்படுத்தப்பட்டது.
சென்னையில் மட்டுமில்லாமல் தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தோறும் கூடுதலாக நடமாடும் காய்ச்சல் கிளினிக் சிகிச்சையை மேற்கொள்ள வேணடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார், மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும், என்றும் ,சத்து மாத்திரைகள் வழங்கவும் வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார், நடமாடும் காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுவதற்கு முன்பு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் மக்கள் தான் முகக்கவசம் அணிந்தார்கள்,
இப்போது 85 சதவீதம் மக்கள் முகக்கவசம் அணியத்தொடங்கி இருக்கிறார்கள், நூறு சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது நமது இலக்கு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், இதில் ஊரடங்கு தேவையில்லை என்று கூறி விடமுடியாது, குடிசைப்பகுதி மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த அவர்களை சந்தித்து விபரமறியவும் தீவிர சிகிசசைகள் அளிக்கவும் ஊரடங்கு நல்ல பலனை அளித்திருக்கிறது, நோய் எதிர்ப்பு சக்திக்கான உயர்தரமான மருந்துகளை வழங்க முதல்வர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்,
நெரிசல் மிக்க சென்னை போன்ற மாநகரங்களில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வும் நடவடிக்கையில் ஊரடங்கு நல்ல பலனை அளித்திருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் 100 சதவீதம் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் டெண்டர் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
டெண்டர் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த டெண்டர் குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு வாரங்களில் வெளியிடுவார். தற்போதைய கொரோனா நோய்த்தொற்று காலக்கட்டத்தில் இணைய யுகத்தில் பாரத்நெட் என்பது நமக்கு கிடைத்த வரபிரசாதம், தனியார் ஆளுகையில் இருந்து அரசின் மூலம் பாரத்நெட் வந்தால் மிகச்சிறந்த பலன் ஏற்படும். 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
உலகளாவிய அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பப்ஜி செயலியை தடை விதிப்பது அரசின் கவனத்தில் கொண்டு செல்லப்படும்,என்று அவர் பதிலளித்தார், மேலும் மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் பரிபூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புவார்கள் அதற்காக நாங்கள் இறைவனை பிரார்த்தனை செய்கிறோம், இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.