முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலையோர மரங்களில் விளம்பர பலகை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னையில் சாலையோரமுள்ள மரங்களில், விளம்பர பலகைகள் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.  மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். 

இந்த மனு மீது சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது.  இதில், சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதுவரை நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து