முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி.க்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி சுப்ரீம் கோர்ட்தான் முடிவெடுக்கும் என ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. 

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்திய மருத்துவ கவுன்சில் இவ்வழக்கு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.  அதில்,  மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர சுப்ரீம் கோர்ட்  அனுமதி அளிக்க வேண்டும். 

இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

எனவே சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து