முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை மையம் நேற்று தெரிவித்துள்ளதாவது:- 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 11 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் நாளை  23-ம் தேதி வரை மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கும், 24-ம் தேதி வரை கேரள கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.  இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து