முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளத்தில் விசாரணை நடத்திய 2 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா

புதன்கிழமை, 22 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : சாத்தான்குளம் வழக்கில் போலீசார்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜூன் 19-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், 60; மகன் பெனிக்ஸ், 31 ஆகியோர், போலீஸ் தாக்குதலில் இறந்தனர்.

இது தொடர்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் என 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  

இந்நிலையில், போலீசாரிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில், அவருக்கு தொற்று உறுதியானதால், மற்ற சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானதால் விசாரணையில் உள்ள 3 போலீசாரையும் ஒருநாள் முன்னதாகவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் போலீசார் மூவருக்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரையில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து