முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிக்காக பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனம், நடமாடும் உணவக வாகனம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு பணிக்காக பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் உணவக வாகனத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.  

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் டி.எஸ்.எல் தொழில் நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக 13 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதில் பேட்டரியில் இயங்கும் 3 மருந்து தெளிப்பான் வாகனங்களையும், ஒரு நடமாடும் உணவக வாகனமும் வாங்கப்பட்டது. இதனை பசுமை வழிச்சாலையிலுள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த வாகனத்தில் 2 மருந்து தெளிப்பான் எடப்பாடி தொகுதியின் பயன்பாட்டிற்கும், மீதமுள்ள ஒன்று சேலம் மாநகராட்சியின் பயன்பாட்டிற்கும், நடமாடும் உணவகம் பெருநகர சென்னை மாநகராட்சி பயன்பாட்டிற்கும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து