முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாறு காணாத உயர்வு: தங்கம் சவரன் ரூ.39,232-க்கு விற்பனை

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தங்கம் விலை மாற்றம் என்பது எப்போதாவது தான் இருக்கும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஓரிரு நாட்களிலேயே அதிகளவில் உயர்ந்து தங்கம் விலை தாறுமாறான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் விலை 2 மடங்குக்கு மேல் அதிகரித்து இருப்பதை புள்ளி விவரங்கள் மூலம் பார்க்க முடிகிறது. கடந்த 2009-10-ம் ஆண்டு இடைவெளியில் ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரம் என்ற நிலையில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றம் என்பது கடந்த 5 ஆண்டுகளில் தான் பெருமளவில் இருந்துள்ளது.

அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்திலேயே பயணித்து வந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இப்போது ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத உயர்வை தொட்டுள்ளது.  

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 உயர்ந்து சவரன் ரூ.39,232-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,904-ஆக அதிகரித்தது. சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து