முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: 14 டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் 2 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 14 டி.எஸ்.பி.க்கள் ஏ.எஸ்.பி.க்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள், 14 டி.எஸ்.பி.க்கள் பதவி உயர்வு குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த அவரது உத்தரவு வருமாறு:

சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக உள்ள மகேஷ்வரி மேற்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.  சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. மல்லிகா சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

பதவி உயர்வு அளிக்கப்பட்ட டி.எஸ்.பி.க்கள் விபரம் வருமாறு:-

பெண்களுக்கு எதிரான குற்றம் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. ஜரினா பேகம்

வணிகவரித்துறை பிரிவி டி.எஸ்.பி. ராஜேஷ்வரி

திண்டிவனம் சப் டிவிஷன் டி.எஸ்.பி. கனகேஸ்வரி

திருப்பூர் சமூகநலன் மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி. கலிவரதன்

மதுரை நகர வரதட்சணை தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் வெற்றிச்செல்வன்.

கரூர், குளித்தலை சப்.டிவிஷன் டி.எஸ்.பி. கும்மராஜா

தலைமை அலுவலக கட்டுப்பாட்டறை டி.எஸ்.பி. கே.ராஜசேகர்

அரியலூர் சமூகநலன் மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி.. பி.கண்ணன்

தேனாம்பேட்டை உதவி ஆணையர் பி.கோவிந்தராஜு.

கோவை நகர குற்றப்பிரிவு (கிழக்கு) உதவி ஆணையர் பாஸ்கரன்.

புளியந்தோப்பு உதவி ஆணையர் ஜெயசிங்.

சேலம் ஆத்தூர் சப்-டிவிஷன் டி.எஸ்.பி. ராஜு.

தமிழ்நாடு சிறப்பு காவல் 5 வது பட்டாலியன் உதவி கமாண்டண்ட் பி.ஏ.உதயகுமார்.

கன்னியாகுமரி, சமூகநலன் மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி. சுப்பராஜு

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து