முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவதாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் மற்றும் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.பரஞ்சோதி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.புத்திச்சந்திரன், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ரத்தினவேல், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.மருதராஜ், திருநெல்வேலி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஆ.இளவரசன், இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வி.ரமணா, மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா, அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. , அ.தி.மு.க. வர்த்தக அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து