முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு: பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 4-வது வாரமாக தளர்வில்லாத ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், தலைநகர் சென்னையில் ஆறாவது ஞாயிற்றுக் கிழமையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அண்ணா சாலை , பூந்தமல்லி நெடுஞ்சாலை , ஜி.எஸ்.டி. சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க, 288 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, அவர்களுக்கு போலீசார், அபராதம் விதித்தனர். 

முழு ஊரடங்கையொட்டி காலை உணவுக்காக அம்மா உணவகங்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று காலை உணவை வாங்கி சென்றனர். மேலும் சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மதுரையில், நேற்று தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 48ஆயிரம் நபர்களிடம் இருந்து 70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாநகரில் 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சி அளித்தது. நெல்லையில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 595 பேரில் 2 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

கடலூரில் 4வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிபுலியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய தேவைகள் இன்றி சுற்றித்திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூரின் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, நகைக்கடை தெரு, பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, ஆகிய பிரதான சாலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் கீழ ராஜ வீதி, அண்ணா சாலை, ரயிலடி, ஆபிரஹாம் பண்டிதர் சாலை ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவலின் தீவிரம் புரியாமல் அரண்மனை விளையாட்டு மைதானத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் டிரோன் கேமிராவில் பதிவாகின. 

திருச்சி மாநகரில் உள்ள மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கே.கே. நகர், தில்லை நகர், பெரியக்கடை வீதி, மலைக்கோட்டை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.  தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கண்காணிக்க 1500 காவலர்களும், 500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கையொட்டி பால் நிலையங்கள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பேருந்து நிலைய பகுதி, கேணிக்கரை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து