முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளை நாளை வெளியிட தேர்வுத்துறை திட்டம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளை நாளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதி நாள் (மார்ச் 24-ம் தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெற முடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன் கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.  

அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மறுதேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்ததும், மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 12-ம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடந்து வரும் நிலையில் நாளை தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 800 பேர் ஹால் டிக்கெட்டுகளை பெற்றிருந்த நிலையில், 500 பேர் தேர்வுக்கு வரவில்லை. 300 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து