முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர்: எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

வியாழக்கிழமை, 30 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து