முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம், பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.  மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  சின்கோனா (கோவை) - 8 செ.மீ., சித்தார் - 6 செ.மீ., தேவலா, சோலையாரில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அந்தமான், மன்னார் வளைகுடா, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து