முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.12.58 கோடி மதிப்பில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்: இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 12 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அம்பத்தூர் மற்றும்  கொன்னூர், சுங்குவார்சத்திரம், கடையநல்லூர், இராதாபுரம், தாமரைப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள், திருப்பூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம்,  சென்னை - பதிவுத்துறைத் தலைவர் அலுவலக இணைப்புக் கட்டிடம் மற்றும் பாலக்கோடு வணிகவரி அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களில், ஆவணங்களைப்  பராமரிப்பதற்கும், போதிய இடவசதி இல்லாததை  கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற வணிகவரி மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும்,  வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் அனைத்து வணிகவரி மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டும் திட்டத்தினை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  

அந்த வகையில், பதிவுத் துறை சார்பில் வட சென்னை பதிவு மாவட்டத்தில் ஒரு கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்பத்தூர் மற்றும் கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள், செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம், தென்காசி பதிவு மாவட்டத்தில் 87 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் மற்றும் திருநெல்வேலி பதிவு மாவட்டத்தில் 85 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம், மதுரை (வடக்கு) பதிவு மாவட்டத்தில் 89 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாமரைப்பட்டி சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம், 

திருப்பூரில் ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருப்பூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம், சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இணைப்புக் கட்டிடம்,  வணிகவரித் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலக்கோடு வணிகவரி அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 12 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை கட்டடங்களை திறந்து வைத்தார். 

பதிவுத் துறையில் 2018-19 மற்றும் 2019-2020-ஆம் ஆண்டுகளுக்கான 143 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச்செயலாளர் சண்முகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை  செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து