முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவரது இல்லங்களிலும் அன்பும் அமைதியும் நல்லிணக்கமும் நிலவட்டும் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். பக்ரீத் திருநாள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பும் அமைதியும் நல்லிணக்கமும் நிலவட்டும் என்று பக்ரீத் திருநாளையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பக்ரீத்  திருநாள் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து நடப்பதே வாழ்வின் மகத்தான நெறி என்பதை உணர்த்தும் பக்ரீத் என்னும் தியாக திருநாளில் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எங்களது மனம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

இறை தூதர் இப்ராகிம் தனது அன்பு மகன் இஸ்மாயிலை இறைவன் தனக்கு கட்டளையிட்டவாறு பலியிட துணிந்ததையும், இறை வார்த்தைக்கும் தனது தகப்பனின் ஆணைக்கும் பணிந்து தானே பலியாக சம்மதித்த இஸ்மாயிலின் பணிவையும் இந்த நாளில் நாம் நினைவில் கொள்ளும் போது நம்மையே நாம் தூய்மையாக்கி கொள்ள அழைக்கப்படுகிறோம்.

அப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய பக்ரீத் திருநாளில் அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பும் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ எங்கள் பிரார்த்தனை உரித்தாகுக. எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் அனைவருக்கும் பக்ரீத் தியாக திருநாள் வணக்கத்தையும் வாழ்த்தையும் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து