முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை: அதிகபட்சமாக மதுரையில் ரூ. 44.85 கோடிக்கு விற்பனை!

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் நேற்று செயல்படாது என்பதால் நேற்று முன்தினம் ஒரேநாளில் தமிழகம் முழுவதும் ரூ.189 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, சேலம், கோவை என்ற மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மது விற்பனையானது நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.189 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், நேற்று முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் ரூ.189 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.85 கோடிக்கும், திருச்சியில் - ரூ.42.72 கோடி, சேலத்தில் - ரூ.40.70 கோடி, கோவையில் - ரூ.38 கோடிக்கும், குறைந்தபட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த சனிக்கிழமை ரூ.177.17 கோடிக்கு மதுபானங்கள் விற்ற நிலையில் நேற்று முன்தினம் ரூ.11.83 கோடி வசூல் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து