முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்திலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

கேரள எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.   

தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு வரை உயர் கடல் அலைகள் 3.5 முதல் 4.4 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து