முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி வழங்கப்படும்: புதிய தாலுகாவாக கல்வராயன்மலை உருவாக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வழங்கப்படவுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை, தென்காசி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்ற அவர் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும். அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ.235 கோடி அளவுக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. தொழில் வளம், வேளாண் வளம், அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள், மருந்துப்பொருட்கள் போதிய அளவு இருப்பில் உள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்ட 6 மாதத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இதுவரை ரூ.520 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.   குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக தடுப்பணைகள் கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 42698 வீடுகளுக்கு ரூ.45.50 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து