முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை-பி கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை-பி கிராமத்தில், 8.8.2020 அன்று கடல் சீற்றத்தின் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்ததில்  மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, அவருடைய மகன் பிரதீப் அஸ்வின் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன். 

காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்துயரச் சம்பவத்தில் லிஸ்டன் என்பவரது மகன் செல்வன் லிபின் மற்றும் சிலுவை என்பவரது மகன் செல்வன் விதுல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.   

மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து