எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை ஒப்பிட்டு பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்த பணி பூஜ்யம் தான் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் 6-வது மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூரில் பள்ளித்தெருவில் கொரோனா தொற்றுநோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 136 களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். அதே போன்று கொரோனோ தொற்றில் குணமடைந்தவர்களுக்கு பரிசு பெட்டகங்களையும் பழங்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
இதை தொடர்ந்து காய்ச்சல் சிகிச்சை முகாமில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
அப்போது அமைச்சர் உதயகுமார் பேசுகையில், கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்துவதோடு அனைத்து மாவட்டங்களிலும் நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து, அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
சென்னை மாநகரை பொறுத்த வரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 124 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர் இப்போது அவர்களில் 94,ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்,
மருந்தே இல்லாத இந்த நோய்க்கு உயிரை பணயம் வைத்து குணப்படுத்தி வரும் மருத்துவர்கள்,களப்பணியாளர்கள்,.செவிலியர்கள் உள்ளிட்ட உங்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட சிறப்பான சீரிய நடவடிக்கையின் காரணமாகவே 87 சதவீதம் பேர் சென்னையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் 8610 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர், இதில் 7276 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1070 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை திருவிக நகர் மண்டலத்தில் 20ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 540 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2307 தெருக்களில் 1897 தெருக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 544 தெருக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க பட்டு வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கை காரணமாக திருவிக நகர் மண்டலத்தில் தொற்று என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது 7 சதவீதமாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று இல்லாத தமிழகமாக மாற்ற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் பொருளதார பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் எந்த மாநிலமும் இல்லாத நிலையில் இந்த கொரோனா கால கட்டத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை 44 தொழிற்நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை செய்துள்ளார்.
அதே போன்று வேளாண், கட்டுமானம், தொழில் துறை என அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதற்கு முதல்வரின் சீரிய நடவடிக்கையே காரணம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஆய்வு மேற் கொள்ள செல்லும் போது அங்கு தொழிற் நிறுவனத்தினர், வேளாண் விவசாயிகள், என பலதரப்பட்டவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என கேட்டறிந்து வருகிறார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஜூன்1 ம் தேதி ஆக.9ம் தேதி வரை 56 சதவீதம் வரை நமக்கு கூடுதலாக மழை பொழிவு கிடைத்துள்ளது.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மூணாறு பகுதிகளில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வசித்து வந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமனோர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை இந்த கூட்டத்தின் மூலம் தெரிவத்துக் கொள்கிறேன்.
அதே போன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேரள முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் மீட்கப்படும் உடல்கள் மிகுந்த சிதலமடைந்தால், அடையாளம் காணப்பட்டு அங்கேயே இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்து வருகிறார்,முன்பு மண்டலங்களில் இடையே சில தளர்வுகள் வழங்கப்பட்டன,
அதில் ஏற்பட்ட சிரமங்கள் உங்களுக்கு தெரியும், மக்களின் வாழ்வாதாரத்தை பொறுத்து, தேவையான தளர்வுகள் வழங்கப்படும் என்று பொது ஊரடங்கு அறிவிப்பை வெளியிடும்போதே முதல்வர் அறிவித்துள்ளார், அதன் படி ஊரகப்பகுதிகளில் இருக்கும் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது,
இப்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள சிறு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன, உடல்பயிற்சி கூடங்கள் மற்றும் ,ஒட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, தேவையான தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது,
இ-பாஸ் விவகாரத்தை பொறுத்தவரை நடைமுறையில் சிரமங்கள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்வதற்காக இ-பாஸ் பெறப்பட வேண்டும், தேவைகள் இன்றி வெளிமாவட்டங்கள் செல்லக்கூடாது என்ற நோக்கத்தோடு தான் இ-பாஸ் கொண்டு வரப்பட்டது.
மருத்துவம் இறப்பு மற்றும் திருமணம் போன்றவற்றிற்காக இ-பாஸ் வழங்கப்படுகிறது. இப்போது அதனை எளிமைப்படுத்துவதற்காக வருவாய் மாவட்டங்களில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் கூறினார்.
இதைத்தொட்ர்ந்து அமைச்சர் உதயகுமாரிடம், திமுகவின் தேர்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவே இ-பாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார் திமுகவினர் எந்த பணியும் செய்யவில்லை, எங்கே தேர்தல் பணியை செய்தார்கள், முடங்கி போய் வீட்டில் தான் இருக்கிறார்ஸ்டாலின். நான் ஆளுங்கட்சியை சார்ந்தவன், அமைச்சர், நான் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவதாக சொல்லலாம்,
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எத்தனையோ கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். ஆய்வு நடத்துகிறார் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறா.
ஆனால் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும்செய்த பணி என்ன, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பணியை ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலினின் செய்த பணி பூஜ்யம் தான் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவிக நகர் மண்டலத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அரவிந்தன் ஐ.ஏ.எஸ்., டி.ஆர்.ஓ. அருணா, முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.