முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை: உத்தராகண்ட் சாரதா ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்கு சாரதா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அதன் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் கனமழை காரணமாக, அங்கு பாயும் சாரதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள பான்பாஷாவில் அமைந்துள்ள அணை நிரம்பி வழிகிறது.

அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டு உள்ளதால், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 2 மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து