Idhayam Matrimony

அ.தி.மு.க. அமைப்புகளுக்கு உறுப்பினர் சேர்ப்பு வழிமுறைகள்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வெளியிட்டனர்

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஆகிய அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகளை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஆகிய அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கண்ட அமைப்புகளுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் போது பின்வரும் வயது வரம்புகளை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அதன்படி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைக்கு 18 வயது முதல் 30 வயது நிரம்பிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், புரட்சித் தலைவி அம்மா பேரவைக்கு 20 வயது முதல் 40 வயது நிரம்பியவர்கள், எம்.ஜி.ஆர். இளைஞரணிக்கு 20 வயது முதல் 35 வயது நிரம்பியவர்கள். 

மேற்கண்ட அமைப்புகளில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டவர்கள் அனைவரும் நடைபெறவுள்ள அ.தி.மு.க அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள்.

இவர்கள் அனைவரும் உறுப்பினர் உரிம சீட்டுகளை தனியாக பெற தேவையில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கண்ட அமைப்புகளுக்கான உறுப்பினர் சேர்ப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு இப்பணியினை செய்து முடித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து