முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட கால்வாய்கள் மூலம்  கீழ்பவானி திட்ட பிரதானக்  கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை  மதகுகளின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாய பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம்,  பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட கால்வாய்கள் மூலம்  கீழ்பவானி திட்ட பிரதானக்  கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை  மதகுகளின் மூலம்  பாசனம் பெறும்  நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு  14.8.2020  முதல் 120 நாட்களுக்கு 23,846.40  மி.கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி,  பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி  மற்றும்   கொடுமுடி  வட்டங்கள்,  திருப்பூர் மாவட்டத்தில்   காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில்  அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என்பதை  நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து