முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறுப்பினர் சேர்ப்பு படிவங்களை தலைமை கழகத்தில் சேர்க்க காலக்கெடு நீட்டிப்பு: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அறிவிப்பு

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை படிவங்களை தலைமை கழகத்தில் சேர்க்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க.வில் ஏற்கனவே உறுப்பினராக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10.8.2020 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை தலைமை கழகத்தில் சேர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டி மாவட்ட செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை தலைமை கழகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடு 17.8.2020 திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது.

இனிமேல் இந்த காலக்கெடு கட்டாயம் நீட்டிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 

ஆகவே மாவட்ட செயலாளர்களும், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமயைாக ஈடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து