முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90 சதவீத மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார்: சரண் தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 ஆகஸ்ட் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : 90 சதவீத மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் என்று எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட வீடியோவில் இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் பேசி இருப்பதாவது:-

கடந்த இரண்டு வாரங்களாக அப்பாவை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் நேற்று அப்பாவை போய் பார்த்தேன். மருந்தினால் சற்று மயக்க நிலையில் இருந்தாலும் ஓரளவு விழிப்புடனேயே இருந்தார்.

என்னை பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அனைவருடைய பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அவரிடம் சொன்னேன்.

அவர் உறுதியாக இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் கூறினேன். அவர் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டினார். நான் எப்படி இருக்கிறேன் என்றும் அம்மா எப்படி இருக்கிறார் என்றும் சைகை மூலம் கேட்டார். அப்பாவை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவருக்கும் என்னை பார்த்ததில் சந்தோஷம். இனிமேல் தினமும் அவரை போய் பார்ப்பேன்.

அவர் அறையில் ஒலிக்கும் பாடல்கள் அப்பாவுக்கு கேட்கிறது. அவரது படுக்கை அருகில் கடவுள் படங்கள் உள்ளன. அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் எங்கள் குடும்பம் நன்றி கடன்பட்டுள்ளது.

அப்பா விரைவில் மீண்டு வந்து எல்லோரையும் சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீத மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து