முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

எஸ்.பி. பாலசுப்ரமணியம், தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவருடைய தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது.

நினைவுடன் உள்ள அவரால் பிறர் பேசுவதை உணர்ந்து பதிலளிக்க முடிகிறது. பிசியோதெரபி சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தருகிறார். பல்துறை மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து