முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறவினருக்கு தொற்று எதிரொலி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனிமைப்படுத்திக்கொண்டார்

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகை : மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 28 - ந் தேதி உயிரிழந்தார்.நாகப்பட்டினம் மாவட்டம் ஓரடியம்புலத்தில் அமைச்சரின் மனைவி கலைச்செல்வி இறுதிச்சடங்கு நடந்தது.

இறுதிச்சடங்கில் உறவினர்கள், அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருவாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து