முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வள்மண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்யும்.  சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெயக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  ஏற்காடு, ஏத்தாப்பூர் தலா 9 செ.மீ மழையும், தர்மபுரி 7 செ.மீ மழையும், திருவண்ணாமலை, பாரூர், சூளகிரி, சூலூர், சுராலகோடு தலா 6 செ.மீ மழையும், ஆத்தூர், போச்சம்பள்ளி, பென்னாகரம், சிவலோகம் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து