முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னையிலிருந்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2020      தமிழகம்

தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.  பாண்டியன், கன்னியாகுமரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேரன், நீலகிரி, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக 6 சிறப்பு ரயில்களும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்பதிவு இல்லாதவர்கள் ரயில் பயணிக்க அனுமதி மளுக்கப்பட்டுள்ளது. 

ரயில் நிலையங்களில் உடல் வெப்பநிலை சோதனைக்கு பிறகு சரியான வெப்பநிலை உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என கூறியுள்ளது. எனவே பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. சென்னை - கன்னியாகுமரி, சென்னை - தூத்துக்குடி, சென்னை-மேட்டுப்பாளையம், சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே சென்னை - மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை - கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து