முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆதிச்சனூர் கிராமத்தில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த சுப்புராயன் மகன் முருகன் மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் கந்தசாமி எதிர்பாராத விதமாக தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், திட்டவிளை பகுதியைச் சேர்ந்த முத்துநாயகம் மகன் ஏசுதாஸ்  சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கிள்ளியூர் வட்டம், கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் சிறுவன் ஜெர்சின் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் மகன் ஷிபு மீன்பிடி பணியின் போது, படகு சாய்ந்ததில், கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த இக்னேஷியஸ் என்கிற தோமா மீன்பிடி பணியின் போது, படகிலிருந்து தவறி கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த  கலைஞர் என்பவரின் மகன் சிறுவன் கலாநிதிமாறன் என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்  என்ற செய்தியையும்,

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோகி கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் கரும்பாயிரம் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் வட்டம், வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நடுக்காட்டான் மகன் பாஸ்கர்  மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சிறுவன் ஆதித்யா மற்றும் சக்திவேல்  மகள் சிறுமி பாரதி ஆகிய இருவரும் செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கூனிமேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வேல்முருகன் மீன்பிடி பணியின் போது தவறி விழுந்து, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், திருப்புட்குழி கிராமத்தைச் சேர்ந்த சோமு மகன் செல்வன் கஜன் மற்றும் விவேகானந்தன் மகன் சிறுவன் ஜெகப்பிரியன் ஆகிய இருவரும் தாமரை குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ஜீவானந்தம் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது, மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் விஜய் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாவினிப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் இரண்டு குழந்தைகள் மகா விஷ்ணு மற்றம் அஜிவித்யாஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன்  மகன் குருசாமி வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திருபாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்  மகன்  ஜெயபால்  சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

கள்ளக்குறிச்சி வட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ மகள் செல்வி கனிமொழி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன்கள் சிறுவன் ஜெகதீஸ்வரன் மற்றும் சிறுவன் விகாஸ் ஆகிய இருவரும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

ராமநாதபுரம் வட்டம், காந்திநகரைச் சேர்ந்த  சுரேஷ்குமார் மகன் சிறுவன் ஜெப்ரி ரோஹித் என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த  ரவிச்சந்திரன் என்கிற ரவி என்பவரது மகன் ரஞ்சித் கொட்டரை நீர் தேக்கத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து