முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 5783 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  : தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 4,63,480-ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 88 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 7,836 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக தினசரி தொற்று ஆயிரத்திற்கு மேல் பதிவாகியது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைய தொடங்கியுள்ளது. இது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாதிப்பு மட்டும் தினம் 6 ஆயிரத்தை நெருங்குவது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் இன்னும் நீங்காமல் அப்படியே உள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 85,974 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,783 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் 955 பேர், அரியலூர் 37, செங்கல்பட்டு 361, கோவை 538, கடலூர் 388, தருமபுரி 24, திண்டுக்கல் 118, ஈரோடு 118, கள்ளக்குறிச்சி 184, காஞ்சிபுரம் 196, கன்னியாகுமரி 116, கரூர் 43, கிருஷ்ணகிரி 86, மதுரை 111, நாகப்பட்டிணம் 136, நாமக்கல் 96, நீலகிரி 48, பெரம்பலூர் 17, புதுக்கோட்டை 100, ராமநாதபுரம் 42, ராணிப்பேட்ைட 135, சேலம் 122, சிவகங்கை 33, தென்காசி 53, தஞ்சாவூர் 150, தேனி 84, திருப்பத்தூர் 44, திருவள்ளூர் 246, திருவண்ணாமலை 272, திருவாரூர் 123, தூத்துக்குடி 50, நெல்லை 132, திருப்பூர் 153, திருச்சி 111, வேலூர் 157, விழுப்புரம் 130, விருதுநகர் 67 என 5,773 பேர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 10 என 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,449 பேர் ஆண்கள், 2,372 பேர் பெண்கள். தற்போது வரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 704 ஆண்கள், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 747 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,820 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது வரை 4 லட்சத்து 04ஆயிரத்து 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 51 ஆயிரத்து 458 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதில் தனியார் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 58 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்படி தமிழகத்தில் இதுவரை 7,836 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து