முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த கால அவகாசம் வரும் 30 - ம் தேதி வரை நீட்டிப்பு

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலம் கருதி இணையத்தளம் மூலமாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பாக தொலைக்காட்சி வாயிலாகவும் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக புகார் எழுந்தது. இது சம்மந்தமான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் காணொலி வாயிலாக ஆஜராக விளக்கம் அளித்தார்.

அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 75 பள்ளிகளில், இதுவரை 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மற்ற பள்ளிகள் மீதான புகார்கள் விசாரணையில் உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பள்ளிக் கல்விக் கட்டண விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்ததோடு, நீதிமன்ற உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கையோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மேலும், தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் முதல் தவணைக் கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 30 வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து