முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெகட்டிவ் என வந்த ரிசல்ட்: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி.பி.

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதாவது கொரோனா பாதிப்பில் இருந்து அவர் மீண்டு விட்டதாகவும் எஸ்.பி.பி.க்கு நெகட்டிவ் என தற்போது ரிசல்ட் வந்துள்ளதாகவும் சரண் கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 - ந் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரை மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார்.

திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று மட்டும் சொல்லியிருந்தார். அதன்படி நேற்று எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பரிசோதனையில் தந்தை எஸ்.பி.பி.க்கு நெகட்டிவ் என வந்துள்ளது.

நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது. தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து