முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 சதவீத கட்டணம் வசூலித்ததாக புகார்: 34 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 100 சதவிகித கட்டணம் வசூலித்ததாக 74 பள்ளிகள் மீது பெற்றோர் அளித்த புகார் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணம் கேட்டு வற்புறுத்துவதாக சென்னை ஐகோர்ட்டில் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 17-ம் தேதி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் முதற்கட்டமாக 40 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த உத்தரவை மீறி அதிக கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் தரப்பில் கூறப்படும் வாய்மொழி, எழுத்துப் பூர்வ புகார்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தவும், நோட்டீஸ் அனுப்பவும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

இதன் பேரில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் புகார் தெரிவிக்கும் வகையில், இ-மெயில் முகவரிகளை வெளியிட்டு இருந்தனர். அதில் நிறைய பெற்றோர் புகார் அனுப்பியிருந்தனர். 

பெற்றோர்களிடமிருந்து  பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இதுவரை 74 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் பெறப்பட்டு புகார்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புகார் உறுதி செய்யப்பட்டால் 74 பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து