முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை வழக்கிலிருந்து விலகுகிறேன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி போப்டே அறிவிப்பு

புதன்கிழமை, 9 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு  அணை வழக்கில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற   தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவித்துள்ளார்.  அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரிய மனு மீதான விசாரணைகளில் இருந்து விலகுகிறேன்.

தனது சகோதரர் இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகி இருப்பதால் விலகிக் கொள்கிறேன் என  தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்துள்ளார். 

அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரிய  மனுவை நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் எனவும் பாப்டே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து