முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியில் ஒரு அரசு மகளிர் கல்லூரியும், கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த கல்லூரிகளில் இந்த கல்வியாண்டே முதலே மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகளை தொடங்க மண்டல கல்வி இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த கல்லூரிகளில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து