எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சி : மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-கேள்வி:- தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து....
பதில்:- மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் நோய் தொற்று இருக்கிறதோ, அங்கெல்லாம் நடமாடும் மருத்துவக் குழு, அந்த பகுதிக்கே சென்று, அப்பகுதிகளில் உள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று அறிகுறி இருந்தால் அவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ்வாக இருந்தால், மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைய செய்கிறார்கள்.
கேள்வி:- தென் மாவட்டங்களில் கீழடி போன்ற பகுதிகளில் அகழ்வராய்ச்சி பணிகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் பாலாற்று கரையோரங்களில் பழவேரி போன்ற கிராமங்களில் 5000 ஆண்டுகள் பழைமையான பொருட்கள் கிடைக்கிறது. அங்கு அகழ்வராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுமா?
பதில்:- ஒவ்வொரு பகுதியாக அகழ்வராய்ச்சி செய்து வருகிறோம். நீங்கள் சொல்கின்ற கருத்தையும் அரசு பரிசீலிக்கும். கேள்வி:- மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து எப்போது தொடங்கும்?
பதில்:- கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அது குறைந்த பிறகு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கப்படும்.
கேள்வி:- பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி இல்லை, சிகிச்சை பெறுவதற்கு செங்கல்பட்டிற்கு தான் செல்ல வேண்டியிருக்கிறதே?
பதில்:- ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதில் எந்த குறைப்பாடும் இல்லை. எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தான் அம்மாவின் அரசின் திட்டம். அந்த அடிப்படையில் வரலாற்று சாதனையாக தமிழ்நாடு முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை நாங்கள் துவக்கி இருக்கிறோம்.
அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை மூலமாக பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இங்கேயும் மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்.
கேள்வி:- பட்டுப் பூங்கா பணிகள் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதே?
பதில்:- அறிஞர் அண்ணா பட்டுப் பூங்கா பற்றி சொல்கிறீர்கள். இப்போது 25 சதவிகித பணிகள் முடிவடைந்திருக்கிறது. எஞ்சிய பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கேள்வி:- பட்டு கூட்டுறவு சங்கங்களில் 96 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி இருக்கின்றன. அதை அரசு கொள்முதல் செய்தால் நெசவாளர்களுக்கு உதவியாக இருக்குமே?.
பதில்:- இது ஒரு சோதனையான காலம். கொரோனா தொற்று இருக்கின்ற சூழ்நிலையில் நான்கு ஐந்து மாத காலமாக எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. தற்போது தான் திறந்து இருக்கிறார்கள்.
படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இயல்பு நிலைக்கு வருகின்ற போது இந்த பட்டு சேலைகள் எல்லாம் விற்பனையாகி விடும்.
கேள்வி:- காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் அருகே கீழ்கதிர்பூரில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படாமல் கிடப்பில் இருக்கிறதே?பதில்:- அவை மாதிரிக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள். தற்போது கூட 2112 வீடுகள் ஆற்றின் கரையோரம் இருக்கின்ற மக்களுக்காக கட்டி கொடுத்து இருக்கிறோம்.
பல வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. லட்சக்கணக்கான வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு கட்டுவதற்காக அரசால் திட்டம் தீட்டப்பட்டு, எல்லா மாவட்டங்களிலும் வீடுகள் கட்டுகின்ற திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- காஞ்சிபுரம் நீதிமன்ற கட்டிடம் பழைமையான கட்டிடடமாக இருக்கிறது. நகர்ப்புரத்தில் இருக்கிறது. போக்குவரத்திற்கு நெரிசலாக இருக்கிறது. இதை விரிவுபடுத்துவதற்கான திட்டம் இருக்கிறதா?
பதில்:- காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
கேள்வி:- அனைத்து நெசவாளர்களுக்கும் கொரோனா நிதி வழங்கப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஆனால் 7 ஆயிரம் பேருக்கு தான் நிதி வழங்கப்பட்டுள்ளதே?
பதில்:- நெசவாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு தான் கொடுக்க முடியும். பதிவு செய்யாதவர்களுக்கு எப்படி நிதி கொடுக்க முடியும். நாளைக்கு ஆடிட்டிங்கில் பிரச்சனை வரும். இதற்கு கணக்கு இருக்கிறது. யார் யாரெல்லாம் பதிவு செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் நிதி அளிக்க முடியும்.
கேள்வி:- ஆண்டுதோறும் சுத்தமான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் தமிழக நகரங்கள் பின்தங்கி உள்ளதே. தமிழக நகரங்கள் சுத்தமாக இல்லையா?
பதில்:- எந்த அடிப்படையில் சுத்தமாக இல்லை என்று சொல்கிறீர்கள். ஏற்கனவே இருந்த அரசாங்கத்திற்கும் இப்போதுள்ள அரசாங்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள். அம்மாவின் அரசு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகரங்கள் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு தான் எல்லா பெருநகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு எல்லா நகரங்களிலும் சாலை வசதிகள், தெரு விளக்கு வசதிகள், கழிவுநீர் அகற்றும் வசதிகள், கால்வாய் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கேள்வி:- ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காலம் முடியப் போகிறதே?
பதில்:- இதுகுறித்து ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெளிவுப்படுத்தி விட்டார்.
கேள்வி:- காஞ்சிபுரத்தில் ஜரிகை ஆலை நவீனப்படுத்தாமல் இருக்கிறதே?. பட்டு நெசவாளர்களுக்கு ஜரிகைகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறதே?.
பதில்:- அது குறித்து அரசு பரிசீலிக்கும். அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி பட்டு நெசவாளர்களுக்கு தேவையான ஜரிகைகள் அனைத்தும் எதிர்காலத்தில் கிடைப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.