முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தூக்கிட்டு தற்கொலை : தத்தனேரி மயானத்தில் உடல் தகனம்

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் உடல் தத்தனேரி மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளரின் 19 வயது மகள் ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், நீட்தேர்வு குறித்து பயமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்து வந்தார்.

ஆனால், அவரை அவரது பெற்றோர் ஆசுவாசப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று தனி அறையில் படித்துக் கொண்டிருக்கும் போது, நீட் தேர்வு பயத்தால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் உடல் மதுரை மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தபின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மாணவி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து