முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஆஸி. வீரர் டொமினிக் தீம்: நாளை கடைசி போட்டி நடக்கிறது

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் தீம், ரஷியாவின் டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் டொமினிக் தீம், 6-2, 7-6, 7-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை தீம் பெற்றுள்ளார். முதல் செட்டை எளிதாக வென்றபிறகு, அடுத்த செட்களும் எளிதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் டைபிரேக்கர் வரை நீடித்தது. கடைசி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது. இரண்டு டைபிரேக்குகளும் ஆச்சரியமாக இருந்தது’ என டொமினிக் தீம் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக  நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் வீரர் பாப்லோ காரனோ பஸ்டாவை 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வென்றார்.

இதன்மூலம் 1994-க்கு பிறகு அமெரிக்க ஒபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜெர்மன் வீரர் என்ற பெருமையை அலெக்சாண்டர்  பெற்றுள்ளார்.  சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் டொமினிக் தீம், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து