முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் சராசரி 8.4 சதவீதமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 3 வாரங்களில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு 21.5 சதவீதமாக உள்ளது. இந்த மாநிலத்தில் 51 லட்சத்து 73 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடந்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 12 சதவீதமாக இருக்கிறது. 

டெல்லியில் இது 8.9 சதவீதமாக உள்ளது. மாநிலங்களில் அதிக சோதனைகள் நடத்த வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் 5.8 கோடி சோதனைகள் நடந்துள்ளது. இதில் 50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுவரை 81 ஆயிரத்து 331 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். 

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60 சதவீதம் பேர் உள்ளனர்.  மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேச மாநிலங்களில் சராசரியாக 50 ஆயிரத்துக்கும் அதிக மானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18 மாநிலங்களில் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. 14 மாநிலங்களில் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு பாதிப்புஉள்ளது.  மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து