முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 5,488 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  தமிழகத்தில் நேற்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் நேற்று 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,616 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 256 பேருக்கும், திருவள்ளூரில் 258 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 151 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,525 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,506 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 85,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 63.03 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து