முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுநீரகற்று வாரியத்துக்கு வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருதை முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வேலுமணி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு, Dial for Water 2.0 என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருது மற்றும் கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருது ஆகிய விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

ஸ்கோச் நிறுவனத்தால் கடந்த 30.7.2020 அன்று அரசு மூலம் பொதுமக்களுக்கு சேவை வழங்கல் பிரிவின் கீழ் Dial for Water 2.0 என்ற திட்டத்திற்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு ஸ்கோச் தங்க விருது வழங்கப்பட்டது. Elets Technomedia Pvt. Ltd. என்ற நிறுவனம் இந்திய அரசின் நீர்வள அமைச்சகத்துடன் இணைந்து 28.8.2020 அன்று நடத்திய தேசிய நீர் புதுமை உச்சி மாநாடு 2020-ல் மழைநீர் சேகரிப்பில் புதுமை என்ற பிரிவின் கீழ் கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு தேசிய நீர் புதுமை விருது வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து