முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நேற்று முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகிறது. 

கர்நாடகாவில் வழக்கம்போல் வகுப்புகள் செயல்படாது எனவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.  மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து