முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஆலமரத்துப்பட்டி கண்ணன் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், என். பஞ்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான ஆலமரத்துப்பட்டி கண்ணன், சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளரும், மாவட்ட சேகோ சர்வ் தலைவருமான தமிழ்மணியின் தாயார் பாலாமணி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். அன்பு சகோதரர் கண்ணன், அன்பு சகோதரி பாலாமணி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து