முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநில முன்னாள் முதல்வர் மாஞ்சிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் (தே.ஜ.மு) இணைந்த பீகாரின் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமாரால் பீகார் முதல்வராக்கப்பட்டவர் ஜிதன்ராம் மாஞ்சி. 2014 மக்களவை தேர்தலால் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்ற நிதிஷ் செய்த ராஜினாமாவால் மாஞ்சிக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது. 

சில மாதங்களுக்கு பின் தலித் சமூகத்தின் தலைவரான தன்னை பதவி இறக்கிய போது நிதிஷ் கட்சியை விட்டு வெளியேறினார் மாஞ்சி. பிறகு இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா எனும் பெயரில் ஒரு அரசியல் கட்சியை துவக்கினார். 

தொடர்ந்து பா.ஜ.க.வையும், நிதிஷையும் கடுமையாக விமர்சித்தும் வந்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் அவர், லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணியில் சேர்ந்திருந்தார்.

இதில் அவருக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் இணைந்தார்.

இதன் பலனாக அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் ஏற்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. தே.ஜ.மு.வில் மாஞ்சியின் வரவால் மத்திய உணவுத்துறை அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அதிருப்தியாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

தே.ஜ.மு. உறுப்பினரான அவர் பீகாரில் தலீத் ஆதரவுக் கட்சியான லோக் ஜனசக்தியின் தலைவர். இதனால், மாஞ்சியை விடக் குறைவாக இசட் பாதுகாப்பு கிடைப்பதால் பாஸ்வான் தே.ஜ.மு. மீது மேலும் அதிருப்தியை காட்டுவதாகக் கருதப்படுகிறது.

பீகாரில் கவர்னர் மற்றும் முதல்வர் நிதிஷ் மற்றும் துணை முதல்வர் சுசில்குமார் மோடி  ஆகியோருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து