முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா மாநிலத்தில் பாடகர் எஸ்.பி.பி.க்கு மணல் சிற்பம் வடிவமைத்து அஞ்சலி

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஸ்வர் : பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், எஸ்.பி.பி.யின் பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  நேற்று முன்தினம் (செப். 25) காலமானார்.

அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய உடல், நேற்று (செப். 26) அவருடைய சொந்த கிராமமான திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் எஸ்.பி.பி.யின் பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து