முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா காவல்துறை தலைவருக்கு கொரோனா

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பனாஜி : கோவா காவல்துறை தலைவர் முகேஷ் குமார் மீனாவிற்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்ட மணிப்பால் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில்,  கோவா காவல்துறை தலைவர் முகேஷ் லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார்.

இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.  மேலும், அவரின் உடல் சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார் என தெரிவித்தனர்.

முகேஷ் கடந்த ஜூலை மாதம்தான் கோவா காவல்துறை தலைவராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.  நேற்று முன்தின  நிலவரப்படி, கோவாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,958 ஆக உள்ளது, பலி எண்ணிக்கை 401 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து