முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுதாபியில் இன்று ஐதராபாத் அணியுடன் மோதல்: வலைப்பயிற்சியில் அஸ்வின், இசாந்த்: உற்சாகத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுதி : அபுதாபியில் இன்று ஐதராபாத் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் மோதவுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு அஸ்வின், இசாந்த் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி அணி உற்சாகத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த வருடம் ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது. இதற்கு ஏற்ப வீரர்களை தயார் செய்துள்ளது.

தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் ரகானேவையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வினையும் புதிதாக அணியில் இணைத்துள்ளது.  ஏற்கனவே ரபடா, நோர்ட்ஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகின்றனர்.

முதல் போட்டியில் அஸ்வின் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார். இசாந்த் சர்மா போட்டி தொடங்குவதற்கு முன்பே காயத்தால் அவதிப்பட்டார்.  தற்போது இருவரும் உடற்தகுதி பெற்றுள்ளனர்.

உடற்தகுதி பெற்ற இருவரும் நேற்று முன்தினம் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். இதனால் டெல்லி அணி உற்சாகத்தில் உள்ளது. டெல்லி அணி இன்று அபு தாபியில்  ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து